/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
தாயின் உடலை அரசு மருத்துவமனைக்கு தானம் செய்த மகன்கள்
/
தாயின் உடலை அரசு மருத்துவமனைக்கு தானம் செய்த மகன்கள்
தாயின் உடலை அரசு மருத்துவமனைக்கு தானம் செய்த மகன்கள்
தாயின் உடலை அரசு மருத்துவமனைக்கு தானம் செய்த மகன்கள்
UPDATED : மார் 13, 2026 08:24 AM
ADDED : மார் 13, 2026 07:42 AM

பரமக்குடி: பரமக்குடி அருகே இறந்த தாயின் உடலை மகன்கள் அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கினர்.
பரமக்குடி அருகே கலையூர் கே.கருங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ராமாயி 82. விவசாயம் செய்த இவர் மார்ச் 10ல் வயது மூப்பால் இறந்தார். இவருக்கு கருப்பையா, சண்முகம், அக்பர்ஷா, வக்கீல் பசுமலை ஆகிய நான்கு மகன்கள், மகள் முனியம்மாள் மற்றும் பேரன், பேத்திகள் உள்ளனர்.
ராமாயி உடலை தானமாக வழங்க முடிவெடுத்த இவர்கள், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் உடலை ஒப்படைத்தனர். அதனை பெற்றுக் கொண்ட மருத்துவமனை நிர்வாகம் பாராட்டு சான்றிதழ் வழங்கியது.
மகன் பசுமலை கூறியதாவது: தாயார் இறந்த பின் குடும்பத்தினர், உறவினர்கள் பேசி உடலை தானமாக வழங்க முடிவெடுத்தோம். இச்செயலை விரும்பும் பலர், அதற்கான வழிமுறைகள் தெரியாமல் உள்ளனர். தானம் செய்ய விரும்புவோரின் வீட்டிற்கே மருத்துவமனை நிர்வாகம் வந்து உடலை பெற்றுச்செல்லும். இதனால் பொருள் செலவு மிச்சமாகும். மருத்துவ ஆய்வுகளுக்காக உடல்கள் அடுத்தடுத்து கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

