sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

இதப்படிங்க முதல்ல

/

மாணவர் மூளைச்சாவு: உடல் உறுப்பு தானம்

/

மாணவர் மூளைச்சாவு: உடல் உறுப்பு தானம்

மாணவர் மூளைச்சாவு: உடல் உறுப்பு தானம்

மாணவர் மூளைச்சாவு: உடல் உறுப்பு தானம்


ADDED : பிப் 08, 2025 06:57 AM

Google News

ADDED : பிப் 08, 2025 06:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் அருகே தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த மற்றொரு மாணவர், குருராஜ் நேற்று மூளைச்சாவு அடைந்தார்.

திருப்பூர் மாவட்டம், செங்கப்பள்ளி அடுத்த பல்லகவுண்டம்பாளையம், சாம்ராஜ்பாளையம் பிரிவு பகுதியில், நேற்றுமுன்தினம் அதிவேக தனியார் பஸ் கவிழ்ந்தது. கல்லுாரி மாணவர் இருவர் உயிரிழந்தனர். மாணவ, மாணவியர் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ஊத்துக்குளி அருகேயுள்ள ஊமச்சி வலசு கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து -- அனிதா தம்பதி மகன், குருராஜ்,18. பெருந்துறை கொங்கு கலை அறிவியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு பி.காம்., படித்து வந்தார். பஸ் கவிழ்ந்த விபத்தில் படுகாயமடைந்து கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த குருராஜ், நேற்று, மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து, பஸ் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. மூளைச்சாவு அடைந்த குருராஜின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளது.

துயரமான சூழலிலும், உடல் உறுப்புகளை தானம் அளிக்க முன்வந்த குருராஜின் பெற்றோர் மாரிமுத்து - அனிதாவின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us