/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
ஒரே நேரத்தில் இருவரை மணந்த தாய்லாந்து பெண்
/
ஒரே நேரத்தில் இருவரை மணந்த தாய்லாந்து பெண்
ADDED : மார் 04, 2026 12:25 AM

பாங்காக்: தன் காதலர்கள் இருவரையும், ஒரே நேரத்தில் திருமணம் செய்துள்ளார் தாய்லாந்தைச் சேர்ந்த, 37 வயதான பெண்.
தென்கிழக்கு நாடான தாய்லாந்தின் பிரகோன் சாய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் துவாங்டுவான் கெட்சாரோ, 37. ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றுள்ள இவருக்கு, மூன்று பெண்கள், இரண்டு பேரக் குழந்தைகள் உள்ளனர்.
பாடகி மற்றும் பாடலாசிரியராகவும் இருந்தவர் துவாங்டுவான், பட்டாயாவில் பணிபுரிந்த போது, ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியான ரோமனை சந்தித்தார்.
காலப்போக்கில் அவர்களது உறவு ஆழமடைந்து, இருவரும் ஐந்து ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தனர். அதன்பின், மற்றொரு ஆஸ்திரிய போலீஸ் அதிகாரியான மேக்கியை சந்தித்தார். அவருடன் புதிய காதலை துவக்கினார் துவாங்டுவான். காதலர்கள் இருவரும் துவாங்டுவான் வாழ்க்கையில் மட்டுமல்லாது அவரது குடும்பத்தையும் ஆதரிக்க துவங்கினர். இதையடுத்து, ரோமன் மற்றும் மேக்கி மீதான தன் காதல் குறித்து குடும்பத்தினரிடம் தெரிவித்தார் துவாங்டுவான்.
தன் பெற்றோர், குழந்தைகளின் ஆதரவுடன், இரண்டு காதலர்களையும் ஒரே நேரத்தில் மணந்தார் துவாங்டுவான்.

