sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இதே நாளில் அன்று

/

இதே நாளில் அன்று

/

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று


PUBLISHED ON : ஆக 27, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஆக 27, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆகஸ்ட் 27, 1912

இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டம், ஊர்க்காவல் துறையில், சோமசுந்தரம் பிள்ளையின் மகனாக, 1912ல் இதே நாளில் பிறந்தவர் சோ.சிவபாத சுந்தரம்.

இவர், யாழ்ப்பாணம் மத்திய கல்லுாரியிலும், கொழும்பு சட்டக் கல்லுாரியிலும் படித்தார். 'ஈழகேசரி' பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றினார். 200க்கும் மேற்பட்ட இளைஞர்களை இணைத்து, 'ஈழகேசரி இளைஞர் கழகம்' உருவாக்கி, சமூக பணி செய்தார். இரண்டாம் உலகப் போருக்கு பின், பி.பி.சி.,யில் சேர்ந்து, 'தமிழோசை' என்ற தமிழ் ஒலிபரப்பு நிகழ்ச்சியை துவக்கினார்.

முன்னாள் முதல்வர்களான காமராஜ், அண்ணாதுரை மறைந்தபோது, சென்னை வானொலியில் நேரடி வர்ணனை செய்தார். அனைத்திந்திய எழுத்தாளர் மாநாட்டு அமைப்பாளராகவும் செயல்பட்டார். 'தமிழ் நாவல் நுாற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும், சேக்கிழார் அடிச்சுவட்டில், கவுதம புத்தரின் அடிச்சுவட்டில்' உள்ளிட்ட நுால்களை எழுதிய இவர், 2000 நவம்பர் 8ல் தன் 88வது வயதில் மறைந்தார்.

தேமதுர தமிழோசையை திக்கெட்டும் பரவ செய்தவரின் பிறந்த தினம் இன்று!






      Dinamalar
      Follow us