தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதே நாளில் அன்று/ இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று


PUBLISHED ON : ஜூலை 21, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 21, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜூலை 21, 1929

சென்னை, தண்டையார்பேட்டையில், நாராயணன் செட்டியார் - வேதம்மாள் தம்பதியின் மகனாக, 1874, டிசம்பரில் பிறந்தவர் தணிகாசலம் செட்டியார்.

இவர், முத்தியால்பேட்டை நடுநிலைப் பள்ளியில் படித்து, சென்னை கிறிஸ்துவ கல்லுாரியில் இயற்பியலில் பட்டம் பெற்றார். தலைமை தபால் நிலையம், ஐரோப்பிய நிறுவனங்களில் எழுத்தராகப் பணியாற்றினார். சட்ட கல்லுாரியில் படித்து, 'பீவ்ஸ் அண்டு கோ' எனும் சட்ட நிறுவனத்தில் பணியாற்றி, அதன் ஆலோசகரானார்.

சர் பிட்டி தியாகராயர், டி.எம். நாயர், சி.நடேச முதலியாருடன் இணைந்து நீதிக்கட்சியை துவக்கினார். சென்னை மாநகராட்சி கவுன்சில் தேர்தலில் வெற்றி பெற்றார். பெரம்பூர் மில் தொழிலாளர் பிரச்னையில், கவர்னருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார்.

சுயமரியாதை மாநாட்டில் பங்கேற்றார். உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நிலையில், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு, தன் 54வது வயதில், 1929ல் இதே நாளில் மறைந்தார். சென்னை தியாகராய நகரில், ஒரு தெருவின் பெயரால் வாழும் சமூக நீதி காவலர் மறைந்த தினம் இன்று!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us