sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இதே நாளில் அன்று

/

இதே நாளில் அன்று

/

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று


PUBLISHED ON : அக் 26, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 26, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அக்டோபர் 26, 1890

உத்தர பிரதேச மாநிலம், பதேபூர்மாவட்டத்தில் உள்ள ஹத்கான் என்ற ஊரில் ஆசிரியர் ஜெய் நரேனின் மகனாக, 1890ல், இதே நாளில் பிறந்தவர், கணேஷ் சங்கர் வித்யார்த்தி.

இவர், தன் தந்தையிடம் துவக்க கல்வியையும், ஹிந்து மத தர்மங்களையும் கற்றறிந்தார். உயர்நிலைப் பள்ளிகளில் படித்து, கான்பூர் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக சேர்ந்தார்.

ஹிந்தி, உருது மொழிகளில் வெளியான,'தி சரஸ்வதி' இதழின் துணை ஆசிரியராக சேர்ந்தார்.அதேநேரம், அரசியல் பத்திரிகையான, 'அப்யுதயா'விலும்பணியாற்றினார். நாட்டு நடப்புகளை உற்று நோக்கிய இவர், ரேபரேலி விவசாயிகள், கான்பூர் ஆலை தொழிலாளர்களுக்கு ஆதரவாக கட்டுரைகள் எழுதி சிறை சென்றார்.

மகாத்மா காந்தியை சந்தித்த பின், ஜவுளி தொழிலாளர்கள் போராட்டத்துக்கு தலைமை ஏற்றார். ஸ்வராஜ் கட்சி எம்.எல்.ஏ.,வாக தேர்வாகி, கான்பூர்ஹிந்து - முஸ்லிம் கலவரத்தின்போது, சமாதானம் செய்ய முயன்றார். அப்போது, சமூக விரோதிகளால் கத்தியால் குத்தப்பட்டு, 1931, மார்ச் 25ல் தன் 41வது வயதில் மரணம் அடைந்தார்.

சிறந்த பத்திரிகையாளருக்கான ஜனாதிபதி விருதின் பெயரால், நினைவுகூரப்படுபவரது பிறந்த தினம் இன்று!






      Dinamalar
      Follow us