sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இதே நாளில் அன்று

/

இதே நாளில் அன்று

/

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று


PUBLISHED ON : ஜன 05, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜன 05, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜனவரி 5, 1975

தஞ்சை மாவட்டம், கண்டியூரில், அண்ணாதுரை அய்யங்கார் - ரங்கநாயகி தம்பதியின் மகனாக, 1905, அக்டோபர் 23ல் பிறந்தவர் சீனிவாச ராகவன்.

பள்ளிப் படிப்பை நாகப்பட்டினத்திலும், கல்லுாரிப் படிப்பை திருச்சி யிலும் முடித்தார். திருச்சி செயின்ட் ஜோசப், பாளையங்கோட்டை செயின்ட் சேவியர்,திருநெல்வேலி ஹிந்து கல்லுாரி, சென்னை விவேகானந்தா கல்லுாரிகளில் ஆங்கிலத் துறை தலைவராகவும், துாத்துக்குடி வ.உ.சி., கல்லுாரி முதல்வராகவும் பணியாற்றினார்.

'சிந்தனை' எனும் இலக்கிய இதழை துவங்கி, ராஜாஜி, வையாபுரி பிள்ளை, பி.ஸ்ரீ.நீலகண்ட சாஸ்திரி, ந.பிச்சமூர்த்தி, நீதிபதி மகாராஜன்உள்ளிட்டோரை எழுத வைத்தார். 'நாணல்' எனும் புனைப்பெயரில் இலக்கியத் திறனாய்வு, நாடகம், கவிதைகளை எழுதினார்.

'திரிவேணி' எனும் ஆங்கில இதழின் துணை ஆசிரியராகவும் இருந்தார். நம்மாழ்வார் பாசுரங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.'வெள்ளைப்பறவை' கவிதைக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற இவர், தன் 69வது வயதில், 1975ல், இதே நாளில் மறைந்தார்.

சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ்க்கவிஞர், அ.சீ.ரா., மறைந்த தினம் இன்று!






      Dinamalar
      Follow us