sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மே 12, 2026 ,சித்திரை 29, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/இதே நாளில் அன்று/ இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று


PUBLISHED ON : ஜன 25, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 25, 2025 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜனவரி 25, 1983

மதுரையில், நாட்டாண்மை மல்லி குடும்பத்தில், ராயலு அய்யர் - காவேரி அம்மாள் தம்பதியின் மகனாக, 1905, ஆகஸ்ட் 14ல் பிறந்தவர் சுப்பராமன்.

இவர், கோல்கட்டாவில் ரவீந்திரநாத் தாகூர் நடத்திய, சாந்தி நிகேதனில் இரண்டாண்டுகள் படித்தார். நாட்டின் விடுதலை போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றார். சிறையில், கோவை அவினாசிலிங்கம் செட்டியார், வேதாரண்யம் வேதரத்தினம் உள்ளிட்டோர் நண்பர்களாகினர்.

அனைவரும் காங்கிரசில் இணைந்து, சர்வோதயா திட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். தன், 100 ஏக்கர் நிலத்தை வினோபா பாவேவிடம் பூமிதானமாக வழங்கினார்.

'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் ஈடுபட்டு, கொடுஞ்சிறை தண்டனை பெற்றார். சுதந்திரத்துக்கு பின் மதுரை நகராட்சி தலைவர், எம்.எல்.ஏ., - எம்.பி., பதவிகளை வகித்தார். கிராமிய பல்கலை, காந்தி மியூசியம், காந்தி நிகேதன், உள்ளிட்டவற்றை துவக்கி, சமூக தொண்டு செய்தார்.

மதுரை மகப்பேறு மருத்துவமனை துவக்க, தன் நிலத்தை தானமாக தந்தார். தன் மாளிகையை, காமராஜர் பல்கலைக்கு வழங்கிய இவர், தன், 77வது வயதில், 1983ல் இதே நாளில் மறைந்தார்.

'மதுரை காந்தி'யின் நினைவு தினம் இன்று!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us