sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இதே நாளில் அன்று

/

இதே நாளில் அன்று

/

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று


PUBLISHED ON : பிப் 20, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : பிப் 20, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிப்ரவரி 20, 1960

காஞ்சிபுரம் மாவட்டம், நீர்வளூரில், வெங்கடாச்சாரி - பட்டம்மாள் தம்பதிக்கு மகளாக, 1901, டிசம்பர் 1ல் பிறந்தவர் கோதைநாயகி.

தன், ஐந்தரை வயதில், 9 வயதான வைத்தமாநிதி முடும்பை பார்த்தசாரதி என்பவரை மணந்தார். சிறு வயதிலேயே பாடுவதிலும், கதை சொல்வதிலும் சிறந்தவரான இவர், தன் தோழி பட்டம்மாளிடம் கதை சொல்லி, அதை எழுத சொன்னார். பின், அவரிடமே எழுத, படிக்கக் கற்று, கதைகளையும், நாடகங்களையும் எழுதினார். அவை, பல இதழ்களில் வெளியாகின.

காந்திய வழியில், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். சுதந்திரத்துக்குப் பின், திரைப்பட தணிக்கை துறையில் பணியாற்றினார். இவரின், 'அனாதைப்பெண், சித்தி' உள்ளிட்ட கதைகள் திரைப்படங்களாகின. காங்கிரஸ் வழங்கிய 10 ஏக்கர் நிலத்தை, வினோபாவேயிடம் தானமளித்தார். இவர், தன் 58வது வயதில், 1960ல், இதே நாளில் மறைந்தார்.

வை.மு.கோதைநாயகியின் நினைவு தினம் இன்று!






      Dinamalar
      Follow us