sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

இதே நாளில் அன்று

/

இதே நாளில் அன்று

/

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று


PUBLISHED ON : மே 21, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : மே 21, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மே 21, 1991

முன்னாள் பிரதமர் இந்திரா - பெரோஸ் ஜெஹாங்கீர் கண்டி, காந்தியின் மீது கொண்ட மரியாதை காரணமாக தன் பெயரை பெரோஸ் காந்தி என, மாற்றிக் கொண்டார். இவர்களின் மூத்த மகனாக, மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில், 1944 ஆக., 20ல் பிறந்தவர் ராஜிவ். டில்லி ஷிவ் நிகேதன் பள்ளி, டேராடூனின், 'தி டூன்' பள்ளி மற்றும் சுவிட்சர்லாந்தில் பள்ளி படிப்பை முடித்தார். பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலையில், உயர்கல்வி படித்தவர், 1966ல் இந்தியா திரும்பினார்.

இத்தாலியை சேர்ந்த சோனியாவை காதலித்து, 1968ல் மணந்தார். இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமானியாக பணிபுரிந்தார். பிரதமரான இந்திரா, 1984 அக்., 31ல் சுட்டுக் கொல்லப்பட்டதால், தன், 40 வயதில் நாட்டின் இளம் பிரதமராக ராஜிவ் பதவி ஏற்றார்.

போபால் விஷவாயு, போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் போன்ற சர்ச்சைகளில் சிக்கிய போதிலும், பஞ்சாயத்து ராஜ், நகர்பாலிகா சட்ட திருத்தங்கள் இன்றும் இவரை நினைவுகூர்கின்றன.

தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதுாருக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்த ராஜிவ், தன் 46வது வயதில் 1991ல் இதே நாளில், விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்கொலைப் படை தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இவரது நினைவு தினம் இன்று!






      Dinamalar
      Follow us