sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 12, 2026 ,தை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

இதே நாளில் அன்று

/

இதே நாளில் அன்று

/

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று


PUBLISHED ON : மே 29, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : மே 29, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை மாவட்டம், திருப்பத்துாரில், 1948ல் பிறந்தவர் ராசு எனும் காளிதாசன். இவர், 1969ல் வெளியான, தாலாட்டு என்ற படத்தில், திருப்பத்துார் ராசு என்ற பெயரில் பாடல் எழுதினார். திருப்பத்துாரான் என்ற பெயரிலும் பாடல்கள் எழுதினார். காளிதாசன் என பெயரை மாற்றியதும், இவரது வாழ்வே மாறியது.

குன்னக்குடி வைத்தியநாதன் இசையில், இவர் எழுதி, எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய, 'கருணை உள்ளம்கொண்டவளே கருமாரியம்மா' என்ற பாடல் இன்றும் பிரபலம். தேவாவின் இசையில், வைகாசி பொறந்தாச்சுபடத்தில் அனைத்து பாடல்களையும் எழுதினார்.தொடர்ந்து, அவரது இசையில், 75 படங்களுக்கு மேல் எழுதினார்.

இவர், 108 அம்மன்களையும் துதித்து எழுதிய, 'தாலி வரம் கேட்டு வந்தோம் தாயம்மா' என்ற பாடல் மிகவும் பிரபலமானது. அருணாச்சலம், நட்புக்காக, சுந்தர புருஷன் உள்ளிட்ட படங்களின் பாடல்களும் பிரபலமாகின. தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருது பெற்ற இவர், தன் 68வது வயதில், 2016ல் இதே நாளில் மறைந்தார்.

இவரது நினைவு தினம் இன்று!






      Dinamalar
      Follow us