sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

இதே நாளில் அன்று

/

இதே நாளில் அன்று

/

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

1


PUBLISHED ON : அக் 01, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 01, 2025 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அக்டோபர் 1, 1973

நாகப்பட்டினம் மாவட்டம், போலகம் என்ற ஊரில், ராமாமிருத அய்யர் -- யோகாம்பாள் தம்பதியின் மகனாக, 1890, செப்டம்பர் 26ல் பிறந்தவர் ராமசர்மன் எனும் பாபநாசம் சிவன்.

சிறுவயதில் தந்தையை இழந்ததால், திருவனந்தபுரத்தில் தாயுடன் குடியேறி, மலையாளம், சமஸ்கிருதம் படித்தார். தாய் மறைந்த பின், தஞ்சை மாவட்டம், பாபநாசத்துக்கு வந்தார். அங்குள்ள சிவன் கோவில் முன், தினமும் மனமுருகி பாடியதால், 'பாபநாசம் சிவன்' என அழைக்கப்பட்டார்.

இவர், வித்வான் நுாரணி மகாதேவ அய்யர், சாம்ப பாகவதர், கோனேரிராஜபுரம் வைத்தியநாத அய்யர் உள்ளிட்டோரிடம் இசை கற்று, 1918ல் திருவையாறு தியாகராஜர் ஆராதனையில், தன் முதல் கச்சேரியை செய்தார்.

இவர் இயற்றிய, 'என்ன தவம் செய்தனை, நான் ஒரு விளையாட்டு பொம்மையா' உள்ளிட்ட கீர்த்தனைகள் புகழ்பெற்றவை. இவர், 1934ல், சீதா கல்யாணம் படத்துக்கு முதல் பாடலை எழுதினார். 'மன்மத லீலையை, ராதே உனக்கு' உள்ளிட்ட, 800க்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியவர், அம்பிகாபதி, சிந்தாமணி, சிவகவி உள்ளிட்ட படங்களுக்கு இசையும் அமைத்தார்.

'பத்மபூஷண்' உள்ளிட்ட விருதுகளை பெற்றவர், தன் 83வது வயதில், 1973ல் இதே நாளில் மறைந்தார்.

இவரது நினைவு தினம் இன்று!






      Dinamalar
      Follow us