sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பக்கவாத்தியம்

/

'ரொம்ப, 'பாசமா' இருக்காங்களே!'

/

'ரொம்ப, 'பாசமா' இருக்காங்களே!'

'ரொம்ப, 'பாசமா' இருக்காங்களே!'

'ரொம்ப, 'பாசமா' இருக்காங்களே!'


PUBLISHED ON : ஆக 24, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஆக 24, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த விவசாய கண்காட்சியை, தமிழக அமைச்சர்கள் அன்பரசன், பன்னீர்செல்வம், நேரு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று துவக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் பன்னீர்செல்வம் பேசுகையில், 'அமைச்சர் நேரு முதலில் விவசாயி; பின், மிளகாய் வியாபாரியும் கூட. அவர் நிறைய பேசுவார்' என்றார்.

நேரு பேசுகையில், 'முதல்வர் நிகழ்ச்சிக்கே பன்னீர் செல்வம் தாமதமாக தான் வருவார். அவர் சார்ந்த துறைக்கு மட்டும், 50,000 கோடி ரூபாய் முதல்வர் ஒதுக்கீடு செய்கிறார். முதல்வருக்கு அவர் தான் தளபதி' என்றார்.

மூத்த நிருபர் ஒருவர், 'சீனியர் அமைச்சர்கள் ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர், 'ரொம்ப பாசமா' இருக்காங்கன்னு நல்லா தெரியுது...' என முணுமுணுக்க, உடன் இருந்தோர், நமட்டு சிரிப்புடன் நடையை கட்டினர்.






      Dinamalar
      Follow us