sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பக்கவாத்தியம்

/

'வில்லங்கமா தான் இருக்கும்!'

/

'வில்லங்கமா தான் இருக்கும்!'

'வில்லங்கமா தான் இருக்கும்!'

'வில்லங்கமா தான் இருக்கும்!'

2


PUBLISHED ON : மே 30, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : மே 30, 2024 12:00 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட திருக்கோவில்களின் பரம்பரை அறங்காவலர்கள் நலச்சங்க ஆரம்ப கட்ட நிர்வாகிகள் கூட்டம் கோவையில் நடந்தது. இதில், ஓய்வு பெற்ற அறநிலையத் துறை இணை கமிஷனர் செந்தில்வேலவன், பரம்பரை அறங்காவலர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அறங்காவலர்கள், அரசுக்கு இடையூறின்றி எப்படி செயல்பட வேண்டும் என்பதை தெளிவுபடுத்தினார்.அப்போது, ஒரு சிலர் கேள்வி கேட்காமல் அமைதியாக இருந்ததை பார்த்த செந்தில்வேலவன், 'நீங்கள் எந்த கேள்வியும் கேட்காமல் இருக்கிறீர்களே...' என்றார்.

அதற்கு, 'ஊடக நண்பர்கள் கிளம்பட்டும்... அப்புறம் கேட்கிறோம்...' என, அவர்கள் கூற, செந்தில்வேலவனோ, 'அவர்கள் இருந்தால் என்ன... சும்மா கேளுங்கள்...' என்றார். மூத்த நிருபர் ஒருவர், 'நம்மள வச்சிக்கிட்டு கேட்க தயங்குறாங்கன்னா கேள்வி வில்லங்கமா தான் இருக்கும்...' என முணுமுணுக்க, மற்றவர்கள் ஆமோதித்து தலையாட்டினர்.






      Dinamalar
      Follow us