sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

பக்கவாத்தியம்

/

 'போட்டிகள் நடத்த போறாரோ?'

/

 'போட்டிகள் நடத்த போறாரோ?'

 'போட்டிகள் நடத்த போறாரோ?'

 'போட்டிகள் நடத்த போறாரோ?'

1


PUBLISHED ON : பிப் 10, 2026 03:15 AM

Google News

PUBLISHED ON : பிப் 10, 2026 03:15 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், 148 பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகளின் துவக்க விழா, ரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் சமீபத்தில் நடந்தது. மாணவ - மாணவியருக்கு தனித்தனியே சிலம்பம் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன.

சிலம்ப போட்டிகளை துவக்கி வைத்த மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், இடைவேளையின்போது அங்கிருந்த உடற்கல்வி ஆசிரியரிடம் விளையாட்டு விதிமுறைகள், செயல்முறைகள் குறித்து கேட்டறிந்தார். அடுத்து, கோ-கோ போட்டியை பார்வையிட்டவர், போட்டி நேரம் உள்ளிட்ட விதிமுறைகளை பொறுமையாக கேட்ட பின், புறப்பட்டு சென்றார்.

அங்கிருந்த ஆசிரியர் ஒருவர், 'கமிஷனர், இவ்வளவு பொறுமையா விளையாட்டு போட்டிகள் பற்றி கேட்டு தெரிஞ்சிட்டு போறாரே... மாநகராட்சி ஊழியர்களுக்கும் ஏதாவது விளையாட்டு போட்டிகள் நடத்த போறாரோ...?' என முணுமுணுக்க, சக ஆசிரியர்கள் ஆமோதித்தனர்.






      Dinamalar
      Follow us