sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பக்கவாத்தியம்

/

'கவுன்சிலர்களுக்கு பேச தெரியாது!'

/

'கவுன்சிலர்களுக்கு பேச தெரியாது!'

'கவுன்சிலர்களுக்கு பேச தெரியாது!'

'கவுன்சிலர்களுக்கு பேச தெரியாது!'

1


PUBLISHED ON : நவ 28, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : நவ 28, 2024 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலக் குழு கூட்டம், தி.மு.க.,வைச் சேர்ந்த மண்டலக் குழு தலைவர் தனியரசு தலைமையில் நடந்தது. இதில், வழக்கமாக 1 முதல் 14 வார்டுகள் வரையிலான கவுன்சிலர்கள் வரிசையாக பேச அனுமதிக்கப்படுவர்.

தற்போது, சுழற்சி முறையில் பேச அனுமதிக்கப்பட்டனர். இதன்படி, 5வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சொக்கலிங்கம் பேசிக் கொண்டிருந்தார். இவர் எப்போதும், கவிதை நடையில் பேசுவதை வழக்கமாகக்கொண்டவர். இம்முறையும் அதேபோல, தன் வார்டுக்குரிய கோரிக்கைகளை கவிதை நடையில் அடுக்கினார்.

அப்போது, குறுக்கிட்ட மண்டலக் குழு தலைவர் தனியரசு, 'கவுன்சிலர் சொக்கலிங்கத்தின் கவிதை நடை பேச்சு இல்லாமல், இந்த மண்டலக் குழு கூட்டம்முடியாது போலும்...' என்றார்.

இதைக் கேட்ட அதிகாரி ஒருவர், 'பல கவுன்சிலர்களுக்கு பேசவே தெரியாது... இவர், கவிதை நடையில் கோரிக்கை வைத்து, நம்ம கவனத்தை ஈர்த்து விடுகிறாரே...' என, பாராட்டியபடி நடந்தார்.






      Dinamalar
      Follow us