sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பக்கவாத்தியம்

/

 'நிதி கிடைக்கும்னு வந்துட்டாங்களோ?'

/

 'நிதி கிடைக்கும்னு வந்துட்டாங்களோ?'

 'நிதி கிடைக்கும்னு வந்துட்டாங்களோ?'

 'நிதி கிடைக்கும்னு வந்துட்டாங்களோ?'


PUBLISHED ON : டிச 09, 2025 03:12 AM

Google News

PUBLISHED ON : டிச 09, 2025 03:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சமீபத்தில் பெய்த கனமழையால், சென்னையின் குடிநீர் ஆதாரமான புழல் ஏரி நிரம்பி, வினாடிக்கு, 2,500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால், சென்னை மாநகராட்சியின் மணலி மண்டலம், 19வது வார்டு பாலசுப்பிரமணியம் நகரில் உள்ள குடியிருப்புகள் நீரில் மூழ்கின.

அங்கு வசித்தவர்களை, தேசிய பேரிடர் மீட்பு படையினர் உதவியுடன் மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனர். 16 குடும்பங்களைச் சேர்ந்த, 44 பேர் மீட்கப்பட்டு, மாத்துார் அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.

இதையறிந்த, 180 பேர், 'நாங்களும் பாலசுப்பிரமணியம் நகரில் தான் வசிக்கிறோம்' என கூறி, அங்கு வந்து விட்டனர். அவர்களுடன் சேர்த்து, 224 பேர் இருந்ததை பார்த்த மாநகராட்சி அதிகாரி ஒருவர், 'என்னப்பா இது... மீட்கும் போது, 44 பேர் இருந்தாங்க; இப்ப, 224 பேர் இருக்காங்களே... நிவாரண நிதி தருவோம்னு நினைச்சு வந்துட்டாங்களோ...' என கூற, சக அதிகாரிகள் ஆமோதித்தபடியே நகர்ந்தனர்.






      Dinamalar
      Follow us