sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பக்கவாத்தியம்/'அவங்க ஆதாரம் தரலையா?'

'அவங்க ஆதாரம் தரலையா?'

'அவங்க ஆதாரம் தரலையா?'


PUBLISHED ON : மார் 03, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 03, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரையில், அ.தி.மு.க., நிர்வாகி இல்ல திருமண விழாவில், அக்கட்சி பொதுச் செயலர் பழனிசாமி பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினார். அப்போது, நிருபர்களை சந்தித்த பழனிசாமியிடம், 'இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என பன்னீர்செல்வம் கூறுகிறாரே' எனக் கேட்டதற்கு, 'உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் தெளிவாக சொல்லிய பிறகு எப்படி முடக்க முடியும்? அவரது ஆசை நிராசையாகிவிடும்' என்றார்.

தொடர்ந்து நிருபர் ஒருவர், 'கட்சி கொடியுடன் பன்னீர்செல்வம் செல்கிறாரே' என, கேட்டதற்கு, 'அவர் கொடி கட்ட முடியாதே... நீங்கள் பார்த்தீர்களா... பார்த்தால் சொல்லுங்க, அப்படி இருந்தால் நீதிமன்ற அவமதிப்பு ஆகிவிடும்... ஆதாரம் இருந்தால் கொடுங்கள்...' என, கூறிவிட்டு புறப்பட்டார்.

மூத்த நிருபர் ஒருவர், 'நம்மிடம் ஆதாரம் கேட்கிறாரே... இவங்க கட்சிக்கு தமிழகம் முழுதும், 2 கோடி உறுப்பினர் இருக்காங்கன்னு சொல்றாங்களே... அவங்க ஆதாரம் தரலையா...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us