sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பக்கவாத்தியம்

/

'அதிகாரம் பத்தி இவருக்கு தெரியாதா?'

/

'அதிகாரம் பத்தி இவருக்கு தெரியாதா?'

'அதிகாரம் பத்தி இவருக்கு தெரியாதா?'

'அதிகாரம் பத்தி இவருக்கு தெரியாதா?'

1


PUBLISHED ON : ஜூலை 17, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூலை 17, 2025 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை மாநகராட்சியில் நடந்த சொத்து வரி நிர்ணய முறைகேடு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க கோரி, மாநகராட்சி கமிஷனர் சித்ராவிடம், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு தலைமையில் அக்கட்சி கவுன்சிலர்கள் மனு அளித்தனர்.

அப்போது, செல்லுார் ராஜு, 'மதுரை மாநகராட்சியில், 150 கோடி ரூபாய்க்கும் மேல் முறைகேடு நடந்துள்ளது. இந்த முறைகேட்டை அ.தி.மு.க., கவுன்சிலர்கள் தான் வெளிக்கொண்டு வந்தனர். இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

'தவறு செய்தவர்களை தண்டித்த இடம் இந்த மதுரை. அன்று தவறு செய்தவர்களுக்கு கண்ணகி தண்டனை கொடுத்தார். இன்று மாநகராட்சியில் ஊழல் செய்தவர்களை மதுரை கண்ணகியாக நீங்கள் மாறி தண்டிக்க வேண்டும்...' என்றார்.

இதை கேட்ட மூத்த நிருபர், 'கமிஷனரை நடவடிக்கை எடுங்கன்னு கேட்கிறாரே... அவங்களுக்கு எந்த அளவுக்கு அதிகாரம் இருக்குன்னு, முன்னாள் அமைச்சரான இவருக்கு தெரியாதா...' என, முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தனர்.






      Dinamalar
      Follow us