/
தினம் தினம்
/
பக்கவாத்தியம்
/
'இது கூட அதிகாரிகளுக்கு தெரியாதா?'
/
'இது கூட அதிகாரிகளுக்கு தெரியாதா?'
PUBLISHED ON : மார் 22, 2026 02:34 AM

சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான பனமரத்துப் பட்டி ஏரியில், 2,000 ஏக்கரில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. அந்த மரங்களை அகற்றும் பணியை துவக்கி வைக்க, தி.மு.க.,வைச் சேர்ந்த மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், கமிஷனர் இளங்கோவன் உள்ளிட்டோர் பனமரத்துப்பட்டி ஏரிக்கு வந்தனர்.
பூஜை முடிந்ததும், மேயர் கையில் கடப்பாரையை அதிகாரிகள் கொடுத்தனர். அவரும் சாலையை குத்தி தோண்டுவது போல், போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.
இதை பார்த்த, தமிழ்நாடு ஏரி இயற்கை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சரவணன், 'சாலையை குத்த வேண்டியதில்லை. முள் மரத்தைத்தான் கொத்தி எடுக்கணும்' என்றார். பின், கடப்பாரையை வைத்து விட்டு, முள் மரங்களை பிடுங்க தயாராக இருந்த, பொக்லைன் அருகே அனைவரும் சென்றனர்.
இதை பார்த்த கட்சி நிர்வாகி ஒருவர், 'எந்த வேலைக்கு என்ன ஆயுதத்தை தரணும்னே நம்ம அதிகாரிகளுக்கு தெரியலையே...' என முணுமுணுக்க, சக நிர்வாகிகள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.

