sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'அடிக்கடி கட்சி மாறியதால் உளறல்!'

 'அடிக்கடி கட்சி மாறியதால் உளறல்!'

 'அடிக்கடி கட்சி மாறியதால் உளறல்!'


PUBLISHED ON : ஜன 07, 2026 03:59 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 07, 2026 03:59 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, அ.தி.மு.க., அமைப்பு செயலர் ராஜன் செல்லப்பா தலைமையில், ராமநாதபுரத்தில் சமீபத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், மாவட்டச் செயலர் முனியசாமி பேசியபோது, 'தி.மு.க., ஆட்சியில் விலைவாசி உயர்வு, கொலை, போதை பொருட்கள் அதிகரிப்பால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

'வரும் சட்டசபை தேர்தலில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளிலும், அ.தி.மு.க., வெற்றி பெற்று, நம் பொதுச்செயலர் பழனிசாமி முதல்வராவார்' என, உணர்ச்சி பொங்க பேசினார். கூட்டத்தில் இருந்த நிர்வாகி ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு, 'தளபதி, தி.மு.க.,' என கோஷமிடவே, அங்கு சலசலப்பு எழுந்தது.

மேடையின் கீழ் இருந்த தொண்டர் ஒருவர், 'அவர், தி.மு.க.,வில் இருந்து வந்திருப்பார் போல தெரியுது... ஒரே கட்சியில் இருக்கணும்; ஒவ்வொரு கட்சியா மாறினால் இப்படித் தான் உளறணும்' என கூற, சக தொண்டர்கள் சிரித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us