PUBLISHED ON : மே 06, 2025 12:00 AM

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி, சென்னை சூளையில், தி.மு.க., சார்பில் புகழரங்கம் நடந்தது. இதில் காமெடி நடிகர் யோகிபாபு பங்கேற்றார்.
அவர் பேசுகையில், 'முதல் முறையாக அரசியல் மேடை ஏறியுள்ளேன். முதல்வருக்கு பெரிய பெரிய ஜாம்பவான்கள் வாழ்த்து சொல்லலாம். நான் சாதாரண காமெடியன். வாழ்த்த வரவேண்டும் என, அமைச்சர் சேகர்பாபு என்னை அழைத்து வந்துள்ளார்.
'முதல்வரின் செயல்கள், உழைப்பு எல்லாமே வெற்றியில் சென்று முடிய வேண்டும் என, நான் வணங்கும் முருகபெருமானை வணங்கி வேண்டுகிறேன். தமிழக மக்களை ஆண்டவன் காப்பாற்றுவான்; நம் முதல்வரும் காப்பாற்றுவார்' என்றார்.
இதைக் கேட்ட பார்வையாளர்களில் ஒருவர், 'முருகனையும், முதல்வரையும் சரிசமமா பேலன்ஸ் பண்ணி பேசி, அரசியல்வாதிகளையே மிஞ்சிட்டாரே...' என, 'கமென்ட்' அடிக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.

