PUBLISHED ON : மார் 18, 2025 12:00 AM

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்தின், 31வது சாதாரண கூட்டம், மண்டல குழு தலைவர் தனியரசு தலைமையில் நடந்தது. மண்டல உதவி கமிஷனர் விஜய் பாபு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வழக்கம் போல், ஐந்தாவது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சொக்கலிங்கம் அடுக்குமொழி பேச்சால், அரங்கை அதிர விட்டார்.
அவர் பேசுகையில், 'என்னை போல் ஏழை மக்கள் வாழும் பகுதி எனது வார்டு. அழகாக இருக்கும் புதிய மண்டல உதவி கமிஷனர், எனது வார்டையும் அழகுபடுத்துவார் என நம்புகிறேன். உதயசூரியனின் ஒளி போல், அவரது முகம் பிரகாசிக்கிறது. அதுபோல, திருவொற்றியூரும் பிரகாசிக்கும் வகையில் அவர் செயல்பட வேண்டும்...' என்றார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், 'புதிய உதவி கமிஷனருக்கு ஐஸ் கட்டி இல்லப்பா... ஐஸ் பாறையே கவுன்சிலர் துாக்கி வைக்கிறாரே...' என, 'கமென்ட்' அடிக்க, சக நிருபர்கள் சத்தமின்றி சிரித்தனர்.