உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஏப் 27, 2026 12:35 AM

அ நிறம் | அளவு
தமிழக, பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, தஞ்சையில் சமீபத்தில் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'தி.மு.க., கூட்டணியை பொறுத்த வரை, அவர்களுக்குள் எந்த ஒருங்கிணைப்பும் இல்லை. ராகுல், முதல்வர் ஸ்டாலினுடன் இணைந்து பிரசாரம் செய்யவில்லை.
'விஜய்க்கு மக்களிடம் ஈர்ப்பு உள்ளது. சில இடங்களில் அதிகப்படியான ஓட்டுகளை வாங்குவார். அவர், தனக்கென இந்த தேர்தலில், ஒரு ஓட்டு வங்கியை ஏற்படுத்துவார். அந்த ஓட்டு வங்கியால், எங்களின், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் வராது. விஜய் கொடுத்துள்ள மொத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற, 4.83 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும்' என்றார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், 'விஜய், ஆட்சிக்கு வந்தால் தானே, அதை பற்றி கவலைப்படணும்...' என, முணுமுணுக்க, சக நிருபர்கள் சிரித்து, நகர்ந்தனர்.
