PUBLISHED ON : பிப் 08, 2026 02:04 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், சமீபத்தில் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். பல்வேறு கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் அளித்தவர், விஜய் குறித்து கேட்டதும், ஆவேசமானார்.
அப்போது அவர் கூறுகையில், 'கரூரில் 41 உயிர்கள் பலியானதற்கு, நடிகர் விஜய் மீதும் தவறு இருக்கிறது. ஆனால், கொஞ்சம் கூட குற்ற உணர்வு இல்லாமல், கட்சியின் துவக்க நாளில் டான்ஸ் ஆடுகிறார்' என்றார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், 'ஆரம்பத்துல விஜய், கூட்டணிக்கு வருவார் என்ற ஆசையில், கரூர் சம்பவத்துக்கு தி.மு.க.,தான் காரணம்னு சொன்னாங்க. இப்ப கூட்டணிக்கு விஜய் வரமாட்டார் என்பது தெரிந்ததும், அந்த சம்பவத்திற்கு விஜய் தான் காரணம்னு போட்டு தாக்குறாங்களே...' என, முணுமுணுத்தார்.
அருகிலிருந்த மூத்த நிருபரோ, 'வேணும்னா ஒரு பேச்சு, வேண்டாம்னா ஒரு பேச்சு என்பதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா...' என்றபடியே, அங்கிருந்து நகர்ந்தார்.

