PUBLISHED ON : பிப் 14, 2026 01:39 AM

அரசு ஊழியர் சங்கங்களின் ஒரு பிரிவினரான, 'ஆக்டோ - ஜியோ' கூட்டமைப்பினர், 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன்படி, திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
இதில், அங்கன்வாடி பணியாளர்கள் சங்க நிர்வாகி பாக்கியம் பேசுகையில், 'கடந்த 2021ல், எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் இருந்தபோது, எங்களுடன் இணைந்து போராடினார். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றா விட்டால், மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில் அவர் அமர வேண்டிய நிலை உருவாகும்' என்றார்.
அவ்வழியே சென்ற ஒருவர், 'அப்ப எல்லாம், ஒரே சங்கமா இருந்து ஒற்றுமையா போராடினாங்க... இப்ப, ரெண்டு, மூணு சங்கங்களா உங்களை ஆளுங்கட்சி பிரிச்சு விட்டுடுச்சே... உங்க போராட்டம் வெல்லுமா என்பது சந்தேகம் தான்...' என, முணுமுணுத்தபடியே நடையை கட்டினார்.

