PUBLISHED ON : மார் 24, 2026 02:54 AM

தி.மு.க., அரசை கண்டித்து, மதுரை பழங்காநத்தத்தில், அ.தி.மு.க., தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் தலைமை வகித்து பேசிய தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், 'கடந்த 2011ல் தி.மு.க., ஆட்சியின் இறுதிக்கட்டத்தில், மதுரையில் ஜெ., தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதற்கு நான் நெல்லையில் இருந்து என் ஆதரவாளர்களுடன், 200 கார்களில் மதுரை ஆர்ப்பாட்டத்திற்கு வந்தேன். அதன் பிறகு, 2011ல் அ.தி.மு.க., ஆட்சி அமைந்தது.
'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொன்ன மண், மதுரை மண். இந்த மண்ணில் இன்று நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தால், அ.தி.மு.க., மீண்டும் ஆட்சி அமைக்கும்' என, உணர்ச்சி வசப்பட்டார்.
இதை கேட்ட அ.தி.மு.க., தொண்டர் ஒருவர், 'என்ன தான் இருந்தாலும் நானும் பழைய அ.தி.மு.க.,காரர் தான் என்பதை சொல்லாம சொல்லிட்டாருப்பா' என, 'கமென்ட்' அடிக்க, சக தொண்டர்கள் சிரித்தனர்.

