/
தினம் தினம்
/
பக்கவாத்தியம்
/
'நம்பகமான தகவல் வந்திருக்கும்!'
/
'நம்பகமான தகவல் வந்திருக்கும்!'
PUBLISHED ON : டிச 06, 2025 03:24 AM

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பங்கேற்ற பிரசார கூட்டம் நடந்தது.
இதில் பழனிசாமி பேசுகையில், 'விவசாயம் குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன தெரியும்? அவரும் வரட்டும்; நானும் வருகிறேன். விவசாய பயிர்களை எல்லாம், ஒரு இடத்தில் வைக்கலாம். அவை என்ன பயிர்கள் என, அவர் சொல்லட்டும் பார்க்கலாம்; அவருக்கு எதுவும் தெரியாது.
'தமிழக நகராட்சி நிர்வாகத் துறை பணி நியமனங்களில், 800 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது. தேர்தல் நேரத்தில், ஏராளமான அமைச்சர்கள் சிறைக்கு சென்று விடுவர்; நாமெல்லாம் சுதந்திரமாக சென்று ஓட்டு கேட்கலாம்...' என்றார்.
இதை கேட்ட அ.தி.மு.க., தொண்டர் ஒருவர், 'அமைச்சர்கள் எல்லாம் ஜெயிலுக்கு போயிடுவாங்கன்னு, இவருக்கு டில்லியில் இருந்து நம்பகமான தகவல் வந்திருக்கும் போல...' என முணுமுணுக்க, சக தொண்டர்கள் ஆமோதித்தனர்.

