PUBLISHED ON : மே 28, 2025 12:00 AM

சென்னை மாநகராட்சியின், திருவொற்றியூர் மண்டலக் குழு கூட்டம் நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த மண்டலக் குழு தலைவர் தனியரசு தலைமை வகித்தார். இதில், கவுன்சிலர்கள் பலரும், தங்கள் வார்டுகளில் நிலவும் பிரச்னைகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பினர். அதற்கு அதிகாரிகள், 'பார்க்கிறோம்... சரி பண்ணிடுறோம்' என்ற மழுப்பலான பதில்களையே கூறினர். இதை, மண்டலக் குழு தலைவர் கண்டித்தார்.
இதை கவனித்துக் கொண்டிருந்த பத்திரிகையாளர் ஒருவர், 'மணலி மண்டலக் குழு கூட்டத்தில், சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணை கமிஷனர் கட்டா ரவி தேஜா பங்கேற்று, சரியாக பதிலளிக்காத அதிகாரிகளை, 'லெப்ட் அண்டு ரைட்'னு வெளுத்து வாங்கினார். அதுபோல, திருவொற்றியூர் மண்டலக் குழு கூட்டத்திற்கும் அவர் வந்தால் தான், இந்த அதிகாரிகள் சரிப்படுவாங்க...' எனக் கூற, சக நிருபர்கள் ஆமோதித்தனர்.