PUBLISHED ON : பிப் 13, 2026 12:53 AM

தி.மு.க., தென் மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு, விருதுநகரில் சமீபத்தில் நடந்தது.
மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், '2004ல் தென்மண்டல மாநாட்டை, விருதுநகரில் நடத்தி லோக்சபா தேர்தலில், 40க்கு 40 வெற்றி பெற்றோம். 2019, 2024 லோக்சபா தேர்தல்களிலும், இங்கு பிரசாரத்தை துவங்கி தான் வெற்றி பெற்றோம். அதுபோல, 2026 சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெறுவோம்.
'மாநிலங்களை முனிசிபாலிட்டி ஆக்கவும், மாநில கட்சிகளை ஒழிக்கவும், மத்திய பா.ஜ., அரசு முயற்சிக்கிறது. ஆனால், அவர்களால் தொட முடியாத ஒரே மாநிலமாக தமிழகம் உள்ளது' என்றார்.
இதை கேட்ட இளம் பத்திரிகையாளர் ஒருவர், 'இவங்க மட்டும் மத்திய அரசை ஒன்றிய அரசு என கூறி, ஊராட்சி ஒன்றியம் அளவுக்கு மட்டம் தட்டுறாங்க... ஆனா, மத்திய அரசு தமிழகத்தை நகராட்சின்னு தானே பார்க்குது... ஒன்றியத்தை விட நகராட்சி உசத்தி தானே...' என, 'கமென்ட்' அடிக்க, சக நிருபர்கள் சத்தமின்றி சிரித்தனர்.

