PUBLISHED ON : ஜூலை 22, 2026 12:00 AM

அரசு பொதுத் தேர்வுகளான, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் சிறப்பிடம் பிடித்த, திருப்பூர் மாநகராட்சி பகுதி மாணவ - மாணவியருக்கு, சமீபத்தில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில், மொத்தம், 3.93 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
விழாவில், சங்கத்தின் கவுரவத் தலைவர் சக்திவேல் பேசுகையில், 'திருப்பூர் மாணவ - மாணவியர் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். பொதுவாக படித்தவர்கள், கலெக்டர், டாக்டர், வக்கீல் ஆகலாம். ஆனால், திருப்பூரைச் சேர்ந்தவர்கள் ஏற்றுமதியாளர்கள் ஆகலாம்.
'திருப்பூரில் இருந்து ஆண்டுதோறும், 45,000 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்கிறோம். நீங்களும், வருங்காலத்தில் ஏற்றுமதியாளராக வரலாம்; அதற்கு தேவையான உதவிகளை எங்கள் சங்கம் செய்து கொடுக்கும்' என்றார்.
இதைக் கேட்ட பார்வையாளர் ஒருவர், 'படிச்சு முடிச்சு வேலைக்குப் போறதை விட, பலருக்கு வேலை கொடுக்கிறவங்களா நம்ம மாணவர்கள் மாறணும்' எனக் கூற, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்தனர்.
