PUBLISHED ON : பிப் 06, 2026 03:52 AM

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின், மூன்றாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் அரண்மனை பகுதியில், அக்கட்சியினர், 30 கிலோ கேக்கை ஊர்வலமாக எடுத்து வந்து வெட்டினர். த.வெ.க., கட்சியின் சின்னமான, விசிலை ஊதியபடியே, பொதுமக்களுக்கு கேக் வழங்கினர்.
அப்போது, அரண்மனை பகுதிக்கு வந்த பஸ்சை ஓரமாக நிறுத்துவதற்காக, கண்டக்டர் விசில் அடித்தார். யார் விசில் பெருசு எனக் காட்டும் வகையில், த.வெ.க.,வினர் கூட்டமாக அடித்த விசிலுக்கு மத்தியில் டிரைவரும், கண்டக்டரும் குழம்பி தடுமாறினர். அங்கிருந்த போலீசார் வழிகாட்டுதலுக்கு பின், பஸ் ஓரமாக நிறுத்தப்பட்டது.
இதை பார்த்த முதியவர் ஒருவர், 'சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த மாதிரி, இவங்களுக்கு விசில் சின்னத்தை குடுத்துட்டாங்களே... தேர்தல் முடியும் வரை, ஊதியே நம்ம காதை செவிடாக்கிடுவாங்களே...' என, புலம்பியபடியே அங்கிருந்து நகர்ந்தார்.

