sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பக்கவாத்தியம்

/

'ஆதாயமின்றி ஆத்துல இறங்குவாங்களா?'

/

'ஆதாயமின்றி ஆத்துல இறங்குவாங்களா?'

'ஆதாயமின்றி ஆத்துல இறங்குவாங்களா?'

'ஆதாயமின்றி ஆத்துல இறங்குவாங்களா?'

1


PUBLISHED ON : மே 15, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : மே 15, 2025 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, திருவொற்றியூரின் பல முக்கிய சந்திப்பு களில், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சியினர் போட்டி போட்டு, தண்ணீர் பந்தல்களை திறந்து வருகின்றனர்.

உள்ளூர் அரசியல் பிரமுகர்கள், தங்கள் கெத்தை காட்டுவதற்காக, பல ஆயிரம் ரூபாயை செலவழித்து, பிரமாண்ட தண்ணீர் பந்தல்களை திறந்து, டன் கணக்கில் பழங்கள் மற்றும் இளநீர்களை வாங்கி, பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

இதைப் பார்த்த முதியவர் ஒருவர், 'எந்த வருஷமும் இல்லாம, இந்த வருஷம் தண்ணீர் பந்தல்கள் திறப்பதில் ஏன் இவ்வளவு ஆர்வமா இருக்காங்க...' எனக் கேட்டார்.

அருகில் இருந்த வாலிபர், 'தேர்தல் கமிஷன் விதிப்படி, அடுத்த வருஷம் தேர்தலப்ப தண்ணீர் பந்தல்கள் திறக்க முடியாது... அதான், இப்பவே திறந்து, மக்கள் ஆதரவை திரட்டுறாங்க...' என, விளக்கம் அளிக்க, முதியவர், 'அது சரி... ஆதாயமில்லாம யாராவது ஆத்துல இறங்குவாங்களா...' என, முணுமுணுத்தபடியே நடந்தார்.






      Dinamalar
      Follow us