sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

பக்கவாத்தியம்

/

 'சடங்கு மாதிரி ஆக்கிட்டாங்களே!'

/

 'சடங்கு மாதிரி ஆக்கிட்டாங்களே!'

 'சடங்கு மாதிரி ஆக்கிட்டாங்களே!'

 'சடங்கு மாதிரி ஆக்கிட்டாங்களே!'

2


PUBLISHED ON : ஜன 03, 2026 01:17 AM

Google News

PUBLISHED ON : ஜன 03, 2026 01:17 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் சமீபத்தில் நடந்தது. இதில், விவசாயிகள் பலரும் தங்களது குறைகள், கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

ஆனால், அதை கவனிக்காமல், வேளாண் துணை அலுவலர் சுரேஷ்குமார், வேளாண் அலுவலர் விஜயலட்சுமி ஆகியோர், சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தனர். இதை கவனித்த கலெக்டர், 'விவசாயிகள் பேசுவதை கேட்பதா, நீங்கள் பேசுவதை கவனிப்பதா?' என கேட்டார். அத்துடன், 'நீங்கள் எந்த துறை?' என கேட்க, 'வேளாண் துறை மேடம்' என, இருவரும் பதில் அளித்தனர்.

'உங்கள் துறை சம்பந்தப்பட்ட கூட்டத்தில், உங்களுக்கே அக்கறை இல்லேன்னா எப்படி...' என, கலெக்டர் கடிந்து கொண்டார்.

இதை கேட்ட விவசாயி ஒருவர், 'விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை, வேளாண் அதிகாரிகள் வெறும் சடங்கு மாதிரி ஆக்கிட்டாங்களே...' என முணுமுணுக்க, சக விவசாயிகள் ஆமோதித்தனர்.






      Dinamalar
      Follow us