PUBLISHED ON : டிச 17, 2025 03:36 AM

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில், 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்ற பெயரில், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்ற பொதுக் கூட்டம் நடந்தது.
இதில், அவர் பேசுகையில், 'கல்வித் துறையில், தி.மு.க.,வின் பெருமை, பள்ளிகள் வாசலில் கஞ்சா, போதைப் பொருள் விற்பது தான். சாலையில் பெண்கள் நடமாட முடியவில்லை. போதையில் வாலிபர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுகின்றனர்.
'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், சட்டவிரோத செயல்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவோம் என, முதல்வர் ஸ்டாலின் கூறினார். இப்போது, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. முதல்வர் ஸ்டாலினின் இரும்புக் கரம் தற்போது துரு பிடித்து விட்டது...' என்றார்.
இதை கேட்ட தொண்டர் ஒருவர், 'அண்ணன் அடுக்கு மொழியில் நல்லா பேச கத்துக்கிட்டாரே...' என முணுமுணுக்க, சக தொண்டர்கள் ஆமோதித்தனர்.

