PUBLISHED ON : ஜூலை 27, 2025 12:00 AM

அறநிலையத்துறை நிதியில் கல்லுாரி கட்டுவதை விமர்சித்த, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை கண்டித்து, தி.மு.க., மாணவரணி சார்பில், கோவை சிவானந்தா காலனியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், ஈரோடு தி.மு.க., - எம்.பி., பிரகாஷ் பேசுகையில், 'பழனிசாமி, கடும் மன அழுத்தத்தில் இருக்கிறார். வரும், 2031ல், அ.தி.மு.க., என்ற கட்சியே இல்லாமல் போய்விடும்.
'இதுவரை, 3,500 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தி உள்ளோம்; இன்னும், 1,000 கோவில்களுக்கு நடத்த உள்ளோம். அறநிலையத்துறையின் சொத்துக்களை மீட்டுள்ளோம். அத்துறையின் நிதியை மாணவர்கள் படிப்புக்காக செலவு செய்தால் என்ன தவறு...' என்றார்.
பார்வையாளர் ஒருவர், 'உயர் கல்வித் துறைக்கு தான் வருஷா வருஷம் பல ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்குறாங்களே... அந்த நிதியில் கல்லுாரி துவங்காம, கோவில் பணத்தை ஏன் எடுத்தோம்னு விளக்கம் தர மாட்டேங்கிறாரே...' என, சலித்தபடியே அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.