sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பக்கவாத்தியம்

/

'விளக்கம் தர மாட்டேங்கிறாரே!'

/

'விளக்கம் தர மாட்டேங்கிறாரே!'

'விளக்கம் தர மாட்டேங்கிறாரே!'

'விளக்கம் தர மாட்டேங்கிறாரே!'

2


PUBLISHED ON : ஜூலை 27, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூலை 27, 2025 12:00 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அறநிலையத்துறை நிதியில் கல்லுாரி கட்டுவதை விமர்சித்த, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை கண்டித்து, தி.மு.க., மாணவரணி சார்பில், கோவை சிவானந்தா காலனியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், ஈரோடு தி.மு.க., - எம்.பி., பிரகாஷ் பேசுகையில், 'பழனிசாமி, கடும் மன அழுத்தத்தில் இருக்கிறார். வரும், 2031ல், அ.தி.மு.க., என்ற கட்சியே இல்லாமல் போய்விடும்.

'இதுவரை, 3,500 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தி உள்ளோம்; இன்னும், 1,000 கோவில்களுக்கு நடத்த உள்ளோம். அறநிலையத்துறையின் சொத்துக்களை மீட்டுள்ளோம். அத்துறையின் நிதியை மாணவர்கள் படிப்புக்காக செலவு செய்தால் என்ன தவறு...' என்றார்.

பார்வையாளர் ஒருவர், 'உயர் கல்வித் துறைக்கு தான் வருஷா வருஷம் பல ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்குறாங்களே... அந்த நிதியில் கல்லுாரி துவங்காம, கோவில் பணத்தை ஏன் எடுத்தோம்னு விளக்கம் தர மாட்டேங்கிறாரே...' என, சலித்தபடியே அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.






      Dinamalar
      Follow us