sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : செப் 07, 2011 12:00 AM

Google News

PUBLISHED ON : செப் 07, 2011 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேட்டி: மக்களுக்கு அதிகபட்சம் கேடு விளைவிக்கும் மதுவை ஒழிப்பதற்கு நடவடிக்கை இல்லை.

விற்பனையை அதிகப்படுத்தும் முயற்சிகளால் வருங்காலத் தலைமுறை குறித்த கவலை மேலோங்குகிறது. டாஸ்மாக் கடைகளை ஒழித்தால், வரலாற்றில் கல்வெட்டாக ஜெயலலிதாவின் பெயர் நிலைக்கும்.



தி.மு.க., முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேட்டி: ஜனநாயகம் என்பது இரு வேறு கருத்துக்களுக்கு பரிமாற்றம் இருக்க வேண்டும். ஆனால், சர்வாதிகாரத்தில் தான் ஒரே குரலில் வாழ்க என்றிருக்கும். சட்டசபை ஒரு சர்வாதிகார பாணியில் நடக்கிறதே தவிர, ஜனநாயக பாணியில் நடக்கவில்லை.



பா.ஜ., தமிழக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி: மத்தியில் காங்கிரஸ் அரசு செயலிழந்து விட்டது. எந்த முடிவையும் உடனடியாகவும், உறுதியாகவும் எடுக்க முடியாமல் திறனிழந்து திண்டாடிக் கொண்டிருக்கிறது. இந்நிலை தொடர்ந்தால், சட்டம்-ஒழுங்கு சீர்குலையும். மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படும்.



இ.கம்யூ., தேசிய கட்டுப்பாட்டுக் குழு தலைவர் நல்லகண்ணு பேட்டி: அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து உள்ளாட்சித் தேர்தலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சந்திக்கும். கடந்த தேர்தலை விட, அதிக இடங்களை, அ.தி.மு.க., தலைமையிடம் கேட்டு பெறுவோம்.



முன்னாள் எம்.பி., இரா.செழியன் பேச்சு: மகாத்மா காந்தி, நேருவின் வாழ்க்கையை மாணவர்கள் முன்னுதாரணமாக எடுக்க வேண்டும். கடந்த, 50 ஆண்டுகளுக்கு முன், நாட்டில் இருந்த தலைவர்கள் பெரும்பாலும், அரசியல் ஒழுக்கத்தை தலையாய கடமையாக கருதினர்.



சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம் பேட்டி: பல்கலைக்கழகத்தில் தற்போது காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள், அலுவலர் பணியிடங்களை நிரப்ப, ஆட்சி மன்றக் குழு அனுமதி அளித்துள்ளது. மூன்று மாதத்தில் புதிய நியமனங்களைச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.








      Dinamalar
      Follow us