sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : ஜன 23, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜன 23, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்திய குடியரசு கட்சி தலைவர் தமிழரசன் பேட்டி: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க.,வின் வெற்றி அவ்வளவு எளிதல்ல. அரசுக்கு எதிராக ஓட்டளிக்க மக்கள் தயாராக உள்ளனர். அரசுக்கு எதிராக,

ஒடுக்கப்பட்ட மக்கள் ஓட்டளிக்க வேண்டும். எதிர்க்கட்சிகள், இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டிருக்க வேண்டும். நாங்கள் அ.தி.மு.க., கூட்டணியில் தொடர்கிறோம். வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், கூடுதல் தொகுதிகளை பெற்று போட்டியிடுவோம்.

தப்பித் தவறி அ.தி.மு.க., தரப்பு கூடுதல் தொகுதிகள் தந்துட்டாலும், நிறுத்த இவரிடம் ஆட்கள் இருக்காங்களா, என்ன?



அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை பேச்சு: 'பல்கலைகளுக்கான துணைவேந்தர் நியமனத்தில் கவர்னர் தலையீடு கூடாது' என்பது உச்ச நீதிமன்றத்தில், தி.மு.க.,வின் இன்றைய வாதம். ஜெயலலிதா ஆட்சியில், 'தமிழக பல்கலைகளுக்கு வேந்தராக, கவர்னருக்கு பதில் முதல்வரே இருக்க வேண்டும்' என கொண்டு வந்த சட்ட முன்வடிவை, தி.மு.க., எதிர்த்ததோடு, கவர்னருக்கு ஆதரவாக இருந்தது. இதுவே, தி.மு.க.,வின் உறுதியற்ற நிலைப்பாட்டுக்கு உதாரணம்.

அப்ப, ஜெயலலிதா எதிரியா இருந்ததால், அந்த சட்ட முன்வடிவை எதிர்த்தனர்... இப்ப, கவர்னர் எதிரி என்பதால் அவரை எதிர்க்கின்றனர்!

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: குடியாத்தம் இடைத்தேர்தல் தான், அன்று காமராஜரின் முதல்வர் இருக்கையை உறுதி செய்தது. கட்சி துவங்கிய ஆறே மாதத்தில் நடந்த திண்டுக்கல்இடைத்தேர்தல் தான்,எம்.ஜி.ஆரை முதல்வர் இருக்கைக்கு முன்மொழிந்தது. மதுரை கிழக்கு, மருங்காபுரி இடைத்தேர்தல்கள் தான், ஜெயலலிதாவை முதல்வர் ஆசனத்திற்கு ஆயத்தப்படுத்தியது. இடைத்தேர்தல் என்பது வருங்காலத்தை வசந்த காலமாக்குவதற்கான வாய்ப்பு.

அ.தி.மு.க., இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு, டிபாசிட் இழக்கணும்னு எதிர்பார்த்து, ஏமாந்த விரக்தி நல்லாவே தெரியது!

தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் பேட்டி: ஓட்டுக்காக ஈ.வெ.ரா.,வை பெரிய ஆளாகக் காட்டுகின்றனர். அவர் எந்த சாதனையும் செய்யவில்லை. ஈ.வெ.ரா., தீண்டாமையை ஒழித்தார் என்கின்றனர். இப்போதும், ராமநாதபுரம், சிவகங்கை, திருவாரூர் மாவட்டங்களில் தீண்டாமை உள்ளது.

ஈ.வெ.ரா.,வைப் பற்றி பேசி பரபரப்பான சீமானைப் போல, நாமும் ஆகணும்னு நினைச்சுட்டாரோ?






      Dinamalar
      Follow us