sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : பிப் 18, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : பிப் 18, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற



அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை:

வேங்கைவயல் பிரச்னையில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு, பின்னர் குற்றவியல் சட்டத்தின் கீழ், சாதாரண வழக்காக மாற்றப்பட்டு, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்து, அந்த வழக்கின் வீரியத்தை நீர்த்து போகச் செய்துள்ளது தி.மு.க., அரசு. இதில், சி.பி.ஐ., விசாரணை கேட்ட வி.சி., தலைவர் திருமாவளவன் மவுனம் சாதிக்கிறார். கூட்டணி தர்மத்தை காப்பாற்றுவதற்காக, அவரது சமூக நீதி கொள்கையை நீர்த்து போகச் செய்து விட்டாரா?

வேங்கைவயல் பற்றியே பேசிட்டு இருந்தால், சீட், நோட்களின் எண்ணிக்கை குறைஞ்சிடாதா?



தமிழக பா.ஜ., மூத்த தலைவரான, நடிகர் சரத்குமார் அறிக்கை: மயிலாடுதுறையில்சாராய விற்பனையை தட்டிக் கேட்ட இளைஞர்களை, சாராய வியாபாரிகள் கொலை செய்திருக்கும் சம்பவம், தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமூகத்தில் மது, போதை பொருட்களின் பெருக்கம், இளைய சமுதாயத்தின் மீது தாக்குதல், வன்முறை, கொலை என குற்றங்கள் பெருகி வருவது வேதனைக்குரிய விஷயம்.

மது அருந்தும், சிகரெட் பிடிக்கும் காட்சிகள், கொடூர வன்முறையை காட்சிப்படுத்தும் தமிழ் சினிமாக்கள் இவருக்கு வேதனை தரலையா?



தமிழக காங்., கிராம சீரமைப்பு கமிட்டி மண்டல பொறுப்பாளர் டி.என்.அசோகன் அறிக்கை: தமிழகம் முழுதும் காங்கிரஸ் கட்சியை, கிராம அளவில் மறுகட்டமைப்பு செய்யும் பணியை, மாநில தலைமை செய்து கொண்டிருக்கிறது. அதை பாராட்ட மனமில்லாத எதிர் கோஷ்டியினர், மாநில தலைவர் பதவியில் இருந்து செல்வப்பெருந்தகையை மாற்றப் போகின்றனர் என்ற தகவலை பரப்புகின்றனர்.

எல்லா கட்சியிலும் எதிர்க்கட்சிகளுக்கு தான் பதிலடி தருவாங்க... இவங்க கட்சியில மட்டும் தான், கோஷ்டிகளுக்கு பதிலடி தர்றாங்க!



தமிழக பா.ஜ., மகளிரணி தலைவர் உமாரதி பேச்சு: தமிழகத்தில் தற்போது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, பள்ளிகளிலும், கல்லுாரிகளிலும் அதிகம் நடக்கின்றன. இந்த குற்றங்களை தடுக்க நடவடிக்கை இல்லை. 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வை வீட்டிற்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டனர்.

தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்பினாலும், அந்த இடத்தில் இவங்க கட்சியை தமிழக மக்கள் அமர வைப்பாங்களா என்பது கேள்விக்குறி தான்!






      Dinamalar
      Follow us