sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : ஏப் 25, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 25, 2025 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர் தொகுதி இந்திய கம்யூ., - எம்.பி., சுப்பராயன் பேட்டி: பிரதமர் ‍மோடி, 100 நாள் வேலை திட்டத்தை ரத்து செய்ய முடிவெடுத்து விட்டு, இத்திட்டத்திற்கு ஒதுக்கும் பணத்தை குறைத்து வருகிறார். மோடி அரசு, ஏழை மக்களின் பரம விரோதி. பார்லிமென்டில் நாங்கள் எழுப்பிய குரலுக்கு, நிதியை விடுவிப்பதாக தெரிவித்தனர்; ஆனால், இதுவரை நிதி விடுவிக்கப்படவில்லை. இன்னும், 15 நாட்களுக்குள் நிதியை விடுவிக்காவிட்டால், கடுமையான, வலிமையான போராட்டம் வெடிக்கும்.

கம்யூனிஸ்ட்களின் வலிமையான, கடுமையான போராட்டம் எப்படியிருக்கும்னு பார்க்கலாம் என்றே, மத்திய அரசு நிதியை நிறுத்தி வச்சிருக்குதோ?

தமிழக கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன் குமார் பேட்டி: எந்தவித முகாந்திரமும் இன்றி சமீபத்தில், சிமென்ட் விலை 100 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், 'எம்-சாண்ட்' போன்ற மணல் விலை உயர்வும் கட்டுமானத் தொழிலை பாதிக்கும். விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும். இதுகுறித்து முதல்வரிடம் பேச உள்ளோம்.

கனிம வளங்களுக்கான கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியதால் தானே, சிமென்ட், மணல் விலைகள் உயர்ந்திருக்கு என்ற உண்மை இவருக்கு தெரியாதோ?



தமிழக பா.ஜ., பொதுச்செயலர் ஏ.பி.முருகானந்தம் பேட்டி: சட்டசபையில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஜெயசீலன் பேசுகையில், ஐ.டி., பார்க் அமைத்து தருமாறு கேட்டதற்கு, அமைச்சர் தியாகராஜன், 'என்னிடம் கேட்காதீர்கள். எந்த அதிகாரமும் என்னிடம் இல்லை. யாரிடம் நிதியும், திறனும், அதிகாரமும் இருக்கிறதோ அவர்களிடம் கேளுங்கள்' என்கிறார். அதிர்ச்சி அடைந்த சபாநாயகர் அப்பாவு, 'இப்படி பேச வேண்டாம்; 'பாசிட்டிவாக பேசுங்கள்' என, அறிவுரை கூறுகிறார். அமைச்சருக்கே இந்த நிலைமை என்றால், அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்பதுதான் மக்கள் கேட்கும் கேள்வி?

இனி, தியாகராஜன் இப்படி பேச மாட்டார்... அவருக்கு முதல்வர் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துட்டாரே!

அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் பேச்சு: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் அ.ம.மு.க., உள்ளது. அ.தி.மு.க.,வில் அ.ம.மு.க.,இணைவது போன்ற யூக மான கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது. இலை மீது தாமரை மலர்வது இயல்பு. அதே நேரத்தில் தாமரை, இலையை அழுத்துவதில்லை. இதுகுறித்து, பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதிலும் தவறில்லை. கூட்டணி அமைந்ததை உவமையாகக் கூறி உள்ளார்.

உவமை எல்லாம் நல்லாதான் இருக்கு... ஆனா, இலையை மீறி தாமரைதான் எல்லார் கண்களிலும் 'பளிச்'சுன்னு படும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us