sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 26, 2026 ,சித்திரை 13, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

 பேச்சு, பேட்டி, அறிக்கை

/

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

1


PUBLISHED ON : ஏப் 19, 2026 01:05 AM

Google News

PUBLISHED ON : ஏப் 19, 2026 01:05 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக காங்., முன்னாள் தலைவர் தங்கபாலு பேச்சு: கடலுார் தொகுதி காங்., வேட்பாளர் சந்திரசேகரனை வெற்றி பெற செய்ய வேண்டும். அப்போது தான், ஒவ்வொரு வீட்டிற்கும், 8,000 ரூபாய் பரிசு கூப்பன் வழங்கப்படும். மகளிர் உரிமைத்தொகை, 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும். மீண்டும், 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் சிறந்த திட்டத்தை வழங்கிய சிறந்த முதல்வரை நாம் பெற்றுள்ளோம். தி.மு.க., வாக்குறுதிகளையா சொல்லி ஓட்டு கேட்கிறாரே... காங்., சார்பில், வாக்காளர்களுக்கு வழங்க உருப்படியான வாக்குறுதிகள் எதுவுமே இல்லையா?

தமிழ்நாடு தன்னுரிமை கழக தலைவரும், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான பழ.கருப்பையா பேச்சு: அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி, தன் ஆட்சியின் போது தமிழகத்தில் குடிமராமத்து திட்டம் மூலம், ஏரி, குளம், குட்டைகளை சீர்படுத்தி, விவசாயத்தை பெருக்கினார். அத்திக்கடவு - அவிநாசி திட்டம், காவிரி - குண்டாறு இணைப்பு, மேட்டூர் அணையில் இருந்து உபரி நீரை, 100 ஏரிகளுக்கு கொண்டு செல்லும் மகத்தான மூன்று திட்டங்களை தொடங்கி வைத்தவரும் பழனிசாமி தான்.

ஆனா, இந்த திட்டங்கள் எல்லாம், இன்றைய தி.மு.க., ஆட்சியில் எங்கே என தேட வேண்டிய நிலையில் தான் இருக்குது!

தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி: மத்திய பா.ஜ., அரசு, தமிழகத்திற்கு தொடர்ந்து திட்டங்களை மறுத்து வருகிறது. தற்போது, தொகுதி மறுவரையறை மசோதா என்ற பெயரில், தென் மாநிலங்களுக்கு அநீதி இழைக்கக்கூடிய வகையில் செயல்பட்டு வருகிறது. மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவதற்கு, தமிழக மக்கள் இந்த தேர்தலில் நிச்சயமாக பதிலடி தருவர்.

லோக்சபா தொகுதிகள் தொடர்பான பிரச்னையை, சட்டசபை தேர்தலில், 'கோர்த்து' விட பார்க்கிறாரே!

தமிழக துணை முதல்வர் உதயநிதி பேச்சு: பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முரட்டு அடிமை அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி என்றால், பழனிசாமிக்கு முரட்டு அடிமை, திருமங்கலம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., உதயகுமார். எம்.எல்.ஏ., சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவர் என பதவிகள் வகித்தாலும், திருமங்கலம் தொகுதிக்கு ஏதாவது திட்டங்கள் கொண்டு வந்துள்ளாரா?

உதயகுமார், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ., என்பதால், கேட்ட திட்டங்களை எல்லாம் இவங்க உடனே கொடுத்திருப்பாங்களா என்ன?






      Dinamalar
      Follow us