
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரத்தால் இடையூறு
தட்டாஞ்சாவடி சுப்பையா நகர், விநாயகர் கோவில் தெருவில் கழிவுநீர் செல்லும் வாய்க்கால் அருகே மரம் வளர்ந்து இடையூறாக உள்ளது.
சுந்தர், தட்டாஞ்சாவடி.
விளக்கு எரியவில்லை
முத்தியால்பேட்டை சூரியகாந்தி நகர், கிருஷ்ணா நகர் ஆகிய பகுதிகளில் தெரு விளக்குகள் எரியாமல் இருண்டு கிடக்கிறது.
சரவணன், முத்தியால்பேட்டை.
சுத்தமான குடிநீர் தேவை
குயவர்பாளையம் ஏழை மாரியம்மன் கோவில் தெருவில் குடிதண்ணீர் மிகவும் உப்பாக வருவதால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுகுமார், கொசப்பாளையம்.
நாய்கள் தொல்லை
லாஸ்பேட்டை அசோக் நகர் கவிக்குயில் தெரு, பாரதியார் வீதியில் நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
ராமமூர்த்தி, லாஸ்பேட்டை