நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாய்கள் தொல்லை
நெல்லித்தோப்பு அந்தோணியர் வீதியில் நாய்கள் அதிகமாக இருப்பதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
முத்துகுமரசாமி,நெல்லித்தோப்பு.
வாகன ஓட்டிகள் அவதி
வில்லியனுார் - கூடப்பாக்கம் ரயில்வே கேட், தண்டவாள பகுதியில் மிகவும் பள்ளமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
நாகராஜன்,கூடப்பாக்கம்.
மின் விளக்கு எரியுமா?
தவளக்குப்பம், அபிேஷகப்பாக்கம் சாலை தெப்பக்குளம் அருகே மின் விளக்கு இல்லாமல் இருண்டு கிடக்கிறது.
மணிவண்ணன்,தவளக்குப்பம்.
பயணியர் நிழற்குடை தேவை
மரப்பாலத்தில், பயணியர் நிழற்குடை இல்லாமல், பொதுமக்கள் வெயில் மற்றும் மழையில் நின்று அவதிப்பட்டு வருகின்றனர்.
ரவிச்சந்திரன்,மரப்பாலம்.
குண்டும் குழியுமான சாலை
முதலியார்பேட்டையில் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ரவி,முதலியார்பேட்டை.