ADDED : ஏப் 02, 2025 03:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறுவர் பூங்கா கேட் திறக்கப்படுமா?
லாஸ்பேட்டை, குறிஞ்சி நகர், பொன்னி அம்மன் கோவில் அருகே உள்ள சிறுவர் பூங்காவில் உள்ள மூடியிருக்கும் மற்றோரு கேட்டை திறக்க வேண்டும்.
அபிராமி, லாஸ்பேட்டை.
பணியர் நிழற்குடை தேவை
பாக்கமுடையான்பட்டு, ஏர்போர்ட் சாலையில், பயணியர் நிழற்குடை இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஆசியகுமார்.பாக்கமுடையான்பட்டு ,
கழிவுநீர் தேங்கி துர்நாற்றம்
மூலக்குளம், திருமலை தாயார் நகர், எஸ்.ஆர்., அெவன்யூ பகுதியில் வாய்க்கால் அடைத்து கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது.
ராஜலிங்கம், மூலக்குளம்.
குடிமகன்களால் அச்சம்
தவளக்குப்பம், ஸ்ரீஅரவிந்தர் நகரில், இரவு நேரங்களில் குடிமகன்கள் குடிப்பதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
மணி, தவளக்குப்பம்.