நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கழிவுநீர் தேக்கம்
கதிர்காமம் சுப்ரமணியர் கோவில் தெருவில், வாய்க்கால் அடைத்து, கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
நாராயணன், கதிர்காமம்.
வாய்க்காலை அகலப்படுத்த வேண்டும்
நைனார்மண்டபம் மூகாம்பிகை நகரில் கழிவுநீர் செல்ல முடியாமல் இருப்பதால், வாய்க்காலை அகலப்படுத்த நடவடிக்கை வேண்டும்.
செல்வன், முதலியார்பேட்டை.
கால்நடைகளால் விபத்து
வில்லியனுார் புறவழிச்சாலையில், மாடுகள் சுற்றிதிரிவதால், விபத்து ஏற்பட்டு வருகிறது.
மதிவாணன், வில்லியனுார்.
தெரு விளக்கு எரியவில்லை
காமராஜர் நகர் தொகுதி சூரியகாந்தி நகர் முதல் குறுக்கு தெருவில், பல நாட்களாக தெரு விளக்கு எரியாமல் உள்ளது.
குமார், புதுச்சேரி.

