ADDED : ஆக 27, 2025 11:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாடுகளால் இடையூறு
வேல்ராம்பட்டு, திருப்பூர் குமரன் வீதி, 3வது குறுக்கு தெருவில் மாடுகள் படுத்திருப்பதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
-காந்தி, வேல்ராம்பட்டு.
வாய்க்கால் சிலாப் சேதம்
தட்டாஞ்சாவடி, சுப்பையா நகர் 6வது குறுக்கு தெரு, மறைமலை அடிகள் சாலை சந்திப்பில், கழிவுநீர் வாய்க்கால் சிலாப் சேதமடைந்து உள்ளது.
-ராமகிருஷ்ணன், சுப்பையா நகர்.
தெரு நாய்களால் அச்சம்
உழவர்கரை, டைமன் நகர், 3வது குறுக்கு தெருவில், நாய்கள் அதிகமாக சுற்றித் திரிவதால், பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
-அமுதா, உழவர்கரை.
கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தி
வில்லியனுார், மணவெளி, தண்டு கரை வீதியில் ஏரி வாய்க்கால் கழிவுநீர் தேங்கி நிற்பதால், கொசுக்கள் உற்பத்தி அதிமாக பெருகி வருகிறது.
-குமார், வில்லியனுார்.