sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

செங்கல்பட்டு

/

செங்கல்பட்டு: புகார் பெட்டி;அங்கன்வாடி முன் தேங்கும் நீர் குழந்தைகள் தினமும் தவிப்பு

/

செங்கல்பட்டு: புகார் பெட்டி;அங்கன்வாடி முன் தேங்கும் நீர் குழந்தைகள் தினமும் தவிப்பு

செங்கல்பட்டு: புகார் பெட்டி;அங்கன்வாடி முன் தேங்கும் நீர் குழந்தைகள் தினமும் தவிப்பு

செங்கல்பட்டு: புகார் பெட்டி;அங்கன்வாடி முன் தேங்கும் நீர் குழந்தைகள் தினமும் தவிப்பு


ADDED : ஜன 01, 2025 07:59 PM

Google News

ADDED : ஜன 01, 2025 07:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூணாம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட வேளூர் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி வளாகத்தில், அங்கன்வாடி மையம் செயல்படுகிறது.

இதில் 10 குழந்தைகள் பாமரிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கர்ப்பிணியர், பாலுாட்டும் தாய்மார்கள் என அதிகமானோர், இணை உணவு மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனையால் பயனடைந்து வருகின்றனர்.

அங்கன்வாடி மையம் அருகே ஏரிக்கரை உள்ளதால், ஊற்று ஏற்பட்டு அங்கன்வாடி மையம் எதிரே தொடர்ந்து குளம்போல தண்ணீர் தேங்குவதால், குழந்தைகள் கடும் அவதிப்படுகின்றனர்.

இதனால், அங்கன்வாடி மையம் எதிரே மண் கொட்டி உயர்த்தி அமைக்க, பலமுறை மனு அளித்தும், தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பருவமழை காரணமாக தற்போது அங்கன்வாடி மையம் முன் தண்ணீர் தேங்கி உள்ளதால், குழந்தைகள் கடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.

எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, அங்கன்வாடி மையம் எதிரே மண்கொட்டி உயர்த்தி சீரமைக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us