/
புகார் பெட்டி
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு: புகார் பெட்டி;நிழற்குடையில் கட்சி விளம்பரங்கள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?
/
செங்கல்பட்டு: புகார் பெட்டி;நிழற்குடையில் கட்சி விளம்பரங்கள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?
செங்கல்பட்டு: புகார் பெட்டி;நிழற்குடையில் கட்சி விளம்பரங்கள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?
செங்கல்பட்டு: புகார் பெட்டி;நிழற்குடையில் கட்சி விளம்பரங்கள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?
ADDED : செப் 18, 2025 01:30 AM

நிழற்குடையில் கட்சி விளம்பரங்கள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?
அ ச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்டு, ஊனமலை ஊராட்சி உள்ளது.
சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னை மார்க்கத்தில், ஊனமலை ஊராட்சிக்கு உட்பட்ட பயணியர் நிழற்குடை உள்ளது.
இந்த நிழற்குடையில், அரசியல் கட்சியினர் தங்களின் விளம்பரங்களை சுவர் ஓவியங்களாக வரைந்து உள்ளனர்.
பேனர், போஸ்டர்களையும், சுவரில் ஒட்டி வைத்துள்ளனர்.
அரசு நிதியில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையை, அனைத்து அரசியல் கட்சியினரும் விளம்பரம் செய்யும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், இந்த சுவர் ஓவியம், போஸ்டர், பேனர் உள்ளிட்டவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அரவிந்தன்,
அச்சிறுபாக்கம்.