sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

செங்கல்பட்டு

/

புகார் பெட்டி பயனில்லாத பஸ் நிழற்குடை நல்லாமூரில் பயணியர் அதிருப்தி

/

புகார் பெட்டி பயனில்லாத பஸ் நிழற்குடை நல்லாமூரில் பயணியர் அதிருப்தி

புகார் பெட்டி பயனில்லாத பஸ் நிழற்குடை நல்லாமூரில் பயணியர் அதிருப்தி

புகார் பெட்டி பயனில்லாத பஸ் நிழற்குடை நல்லாமூரில் பயணியர் அதிருப்தி


ADDED : பிப் 24, 2025 11:28 PM

Google News

ADDED : பிப் 24, 2025 11:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தாமூர் அடுத்த நல்லாமூர் கிராமத்தில், ரோட்டுக்கடை பகுதியில் பேருந்து நிறுத்தம் உள்ளது.

நல்லாமூர், கொளத்துார், கோட்டிவாக்கம், பெருவெளி உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சித்தாமூர், மதுராந்தகம், செய்யூர், மேல்மருவத்துார் போன்ற பகுதிகளுக்குச் செல்ல, இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்துகின்றனர்.

பல ஆண்டுகளாக இந்த பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை வசதி இல்லை. இந்நிலையில் செய்யூர் - போளூர் சாலை விரிவாக்கத்தின் போது புதிதாக பேருந்து நிறுத்தத்தில் இருந்து 150 மீட்டர் தொலைவில் நிழற்குடை அமைக்கப்பட்டது.

பேருந்து நிறுத்தத்தில் இருந்து தொலைவில் அமைக்கப்பட்டு உள்ளதால், நிழற்குடையை பயன்படுத்த பொதுமக்கள் விருப்பம் காட்டவில்லை.

பேருந்துகளும் நிழற்குடையில் நின்று செல்வது இல்லை. இதனால் புதிய நிழற்குடை பயன்படுத்தப்படாமல் உள்ளது.

எனவே, பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவியர் அமர இடம் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.

எனவே ஊராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து, நல்லாமூர் ரோட்டுக்கடை பேருந்து நிறுத்தம் அருகே நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us