/
புகார் பெட்டி
/
செங்கல்பட்டு
/
சாய்ந்துள்ள மின்கம்பம்: போந்துாரில் அபாயம்
/
சாய்ந்துள்ள மின்கம்பம்: போந்துாரில் அபாயம்
ADDED : ஜன 20, 2026 04:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சித்தாமூர் அருகே போந்துார் கிராமத்தில் இருந்து விளங்காடு செல்லும் தார்ச்சாலை உள்ளது.
இந்த சாலையோரத்தில் விவசாய மோட்டார்களுக்கு மின் வினியோகம் செய்ய அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு, சாய்ந்து உள்ளது.
பலத்த காற்று வீசினால் மின்கம்பம் சாய்ந்து, விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, சாய்ந்துள்ள மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சி.ராஜாகுமரன், செய்யூர்.

